1948 க்குப் பிறகு நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கத்தின் கீழும், பொதுமக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தொம்பே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் முறையாக நிறைவேற்றப்பட்டால், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.